உரிய பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் மனு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் மனு அளித்த அதிமுக.

சென்னையில் காவல் ஆணையரை சந்தித்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமை அலுவலகத்தை தாக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால், வரும் 28ம் தேதி வரை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டேன். ஏற்கனவே, நடந்த சம்பவம் போல் இம்முறை நடக்கக்கூடாது என்பதற்காக காவல் ஆணையரிடம் பாதுகாப்பு கூறியுள்ளோம்.

காவல் ஆணையர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுப்பார் என நம்புகிறேன். இதுவரை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கபட்ட நிலையில், தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரி காவல் ஆணையர் அலுவலக்கத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பேசிய அவர், அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. குட்ட குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல, எங்களை யாரும் குட்ட முடியாது, நாங்கள் குனியவும் மாட்டோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவெடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

Leave a Comment