#Breaking : இடைத்தேர்தலில் காங்கிரஸ் தான் போட்டியிடும்.! கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.!

இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரி பேட்டி. 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், காங்கிரஸ் முக்கிய தலைவர் இவிகேஎஸ்.இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்ததன் காரணமாக அந்த தொகுதிக்கு நேற்று, இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடக்கம் எனவும், பிப்ரவரி  27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதன் காரணமாக தற்போது மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுகவே நேரடியாக வேட்பாளரை களமிறக்கி போட்டியிடுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் போட்டியிடுவார் என்றும், அதற்காக திமுக, விசிக, மதிமுக கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம் என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment