பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்? வாக்குப்பதிவுகள் முடிந்தன!

சுனக் & டிரஸ் இடையேயான பிரிட்டன் பிரதமர் பந்தயத்தில் வாக்குப்பதிவுகள் முடிந்தது. செப் 5ல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது.

பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இடையேயான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் நேற்று(செப் 2) வாக்குப்பதிவு முடிந்தது.

வெற்றியாளர் யார் என்ற முடிவு செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு அறிவிக்கப்படும். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற நபர் செப்டம்பர் 6 ஆம் தேதி, ராணி இரண்டாம் எலிசபெத் முன்னிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள அவரது கோட்டையான பால்மோரலில் முறையாக பிரதமராக நியமிக்கப்படுவார்.

Leave a Comment