தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி!

தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் பல மாணவர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்துகொள்கின்றனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக  நடைபெற்று வருவதால், பல்வேறு அரசியல்வாதிகளும், நடிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்யும் சூழல் மாற வேண்டும் என வும்,நீட் தேர்வு தொடர்பான பிரச்சனையில் தமிழக அரசு தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.