இன்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் முக்கிய ஆலோசனை.!

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள் (பார்சல் மட்டும் ) ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டு நேற்று முதல் இயங்கி வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளார். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 9 குழுக்களுடன் இன்று  காலை 9.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.