இரண்டாவது ரிக் இயந்திரமும் பழுது..! பள்ளம் தோண்டும் பணி நிறுத்தம்..!

கடந்த 25-ம் தேதி தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.சுர்ஜித்தை மீட்க 66 மணிநேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகே ஒரு அங்குலம் அகலத்திற்கு 90 அடி ஆழம் குழி தோண்டும் பணி  நடைபெற்று வருகிறது. இதுவரை 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் 35 அடியும் , இரண்டாவது ரிக் இயந்திரம் 10 அடியும் தோன்றியுள்ளது.
இரண்டாவது இயந்திரம் பழுது ஏற்பட்டு உள்ளதால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தபட்டு உள்ளது. பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டாவது ரிக் இயந்திரத்தின் டிரில் பிட் சேதம் அடைந்து உள்ளது. வேற ஒரு டிரில் பிட்  மாற்றுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நிறுத்தபட்டு உள்ளது. கடினமான பாறைகள் இருப்பதால்  சிறிது பழுது ஏற்பட்டுள்ளது.