5 கிலோ எரிவாயு சிலிண்டரை உபயோகிப்பவர்களுக்கு 8 சிலிண்டர்கள் இலவசம் – மத்திய எண்ணெய் அமைச்சகம்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏப்ரல் 30-ம்  தேதி ஊரடங்கை நீடித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு பெற்ற மக்கள் 5 கிலோ எடை  கொண்ட சிலிண்டரையே  உபயோகப்படுத்துகின்றனர்.  இதனையடுத்து, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு 3 சிலிண்டரும், 5 கிலோ எடையுள்ள சிலிண்டரை பயன்படுத்துபவருக்கு 8 சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய எண்ணெய் அமைச்சகம் செய்தி தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளது.