அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.! 7 பேர் உடல் நசுங்கி பலி.!

திருவண்ணாமலை அருகே செங்கம் பக்கிரிப்பாளையம் புறவழிசாலையில் நேற்று இரவு அரசு பேருந்தும், டாடா சுமோ வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள்ளன.

திருவண்ணாமலையில் இருந்து டாடா சுமோவில் 11 பேர் பெங்களூர் நோக்கி சென்றுள்ளனர். அதே போல, பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து திருவண்ணாமலை நோக்கி வந்துள்ளளது. அப்போது தான் செங்கம் புறவழிச்சாலை அந்தனூர் பகுதியில் காரும் , அரசு பேருந்தும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த பயங்கர விபத்தில், சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த செங்கம் போலீசார், தீயணைப்பு துறையினர் , விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் காரில் 11 பேர் பயணித்தனர் என்றும், அதில் உடல் நசுங்கி 7 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும்,  4 பேர் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், பேருந்தில் பயணித்த 10 பேர் காயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா சுமோவில் வந்தவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதே செங்கம் புறவழிசாலையில் கடந்த 15ஆம் தேதி கார் – லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

28 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

32 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

50 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

53 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

53 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago