ஒரே நேரத்தில் 5 புதிய வந்தே பாரத் ரயில்கள்..! கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி 5 புதிய வந்தே பாரத் ரயில்களை ஜூன் 27ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி ஒரே நேரத்தில் ஐந்து புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். மேக் இன் இந்தியா திட்டத்தின் படி, தயாரிக்கப்பட்ட இந்த ரயில்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களை இணைக்கும்.

ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்த ரயில்கள் கோவா-மும்பை, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர் மற்றும் பெங்களூர்-ஹூப்ளி-தர்வாட் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். இந்த ரயில்களின் மூலம் நாட்டில் உள்ள வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயரும்.

வந்தே பாரத் ரயில்கள், வசதியான இருக்கைகள், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பயணிகள் சேவைகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவை, பிராந்தியங்களில் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.