ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள இடம் பில்லா அணைக்கட்டு உள்பகுதியில் நேற்று கிராமத்தினர் சிலர் மாடு மேய்த்த படி வேலை பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அந்நேரம் அவ்வழியே செல்லக்கூடிய உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில் 65 வயது மூதாட்டி உட்பட 4 பேர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இருப்பினும் நான்கு பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் மூதாட்டி, இருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள். இந்த மின்சார தாக்குதலில் ஒரு மாடும் உயிரிழந்து உள்ளது. மின்சார கம்பி அறுந்து விழுந்து 4 பேர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டடுள்ளனர்.
மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்யும்படி பலமுறை தாங்கள் மின்சார வாரியத்தில் கூறியதாகவும், ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் தான் தற்பொழுது இப்படிப்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனார். இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…