கொரோனாவால் ஒரே நாளில் 32 பேர் பலி… 20,409 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 20,557 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 20,409 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,43,988 ஆக பதிவாகியுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,26,258 பேர் ஆக உள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 98.48% பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,33,09,484ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை  2,03,60,46,307  கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 38,63,960 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment