நடுக்கடலில் ஏற்பட்ட தீ விபத்தால் 3 பேர் இத்தாலியில் உயிரிழப்பு!

இத்தாலியில் நடுக்கடலில் சென்றபோது படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி நாட்டில் நடுக்கடலில் சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் உள்ள துறைமுக நகரமான குரான்டோன் எனும் பகுதியில் படகு தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர் கடற்படையினர்.

படகிலிருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். அந்த படகில் 20 அதிகாரிகள் இருந்ததாகவும் இன்ஜின் அறையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தான் அந்த படகில் தீப்பிடித்து எரிந்ததாக மீட்பு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.