தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை..! வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மூன்று நாள்கள் கன மழை வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. கன்னியாகுமரி ,கர்நாடக கடலோர பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால்  தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு கூறியுள்ளது.