இடிந்து விழுந்த கட்டிடத்தில் 3 பேர் உடல்கள் கண்டுபிடிப்பு..! தீவிரமாகும் மீட்பு பணி..!

லக்னோவில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் 3 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள வாசிர் ஹசன்கஞ்ச் சாலையில் குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்பொழுது கட்டிடத்தில் இருந்து 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கட்டிடத்தில் இருந்து 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் ஐந்து பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மாநில டி.ஜி.பி கூறுகையில், “கட்டிடத்தில் மேலும் ஐந்து பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஐந்து பேரும் ஒரே அறையில் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

Leave a Comment