ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 100 மீட்டர் தடகள போட்டியில், இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளி வென்றார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள், இந்தனோசியாவின் ஜகார்த்த மற்றும் பாலெம்பெங் நகரங்களில் நடந்து வருகின்றனர். இன்றைய போட்டியில், இந்தியா சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 400 மீட்டர், மகளீர் 100 மீட்டர் தடகள போட்டிகளில் வீரர்கள் பதக்கம் வென்றனர்.
பாலினம் குறித்த சர்ச்சையில் சிக்கிய அந்தப் பிரச்சனையிலிருந்து மீண்ட டூட்டி சந்த், 100 மீட்டர் தடகள போட்டியில் வெள்ளி வென்று சாதித்தார். ஆசிய போட்டியின் 100 மீ தடகள பிரிவில், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
பந்தய தூரத்தை அவர் 11.32 வினாடிகளில் கடந்தார். பஹ்ரைனின் எடிடியாங் தங்கமும், சீனாவின் வீயங்க்லி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.அதேபோல, மகளீர் 400 மீட்டர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான இளம் வீராங்கனை ஹேமா தாஸ், 50.59 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார். இது, தேசிய அளவில் சாதனையாகும்.
அதேபோல, ஆண்கள் 400 மீட்டர் தடகள போட்டியில் பந்தய தூரத்தை 45.69 வினாடிகளில் கடந்த முகமது அனஸ், வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், இந்திய அணி 36 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. இதில், 7 தங்கம், 10 வெள்ளி மற்றும் 19 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…