இந்திய போர் விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து.! 2 பெண்கள் உயிரிழப்பு.!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய போர் விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 

இந்திய போர் விமானங்கள் பயிற்சியின் போது விபத்தில் சிக்கும் செய்திகளை நாம் அவ்வப்போது பார்த்து இருப்போம். தற்போது அதே போல ஒரு சம்பவமானது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில், சூரத்கார் இடத்தில் இருந்து புறப்பட்ட மிக்-21 ரக போர் விமானமானது, ஹனுமன்கர் எனும் பகுதியில் பறந்து செல்கையில் வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் அந்த வீட்டில் இருந்த 2 பெண்கள் விமானம் விழுந்ததில் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விமானி சிறிய காயங்களுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விமானப்படை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.