ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த எம்.டெக் பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எம்.டெக் பயோடெக்னாலஜி, எம்.டெக் கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகள் கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது என்பதால் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறாது என ஏற்கனவே பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு பதிலாக மத்திய அரசு 49.9 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற கட்டாயப்படுத்த பட்டதால் நடப்பாண்டில் இந்த இரு படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை கிடையாது என அறிவித்துள்ளதாகவும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு கொள்கையில் மத்திய அரசு தலையிட முடியாது எனவும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி புகழேந்தி அவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, இனி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து எழுத்துப்பூர்வமான விளக்கமும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு பிப்ரவரி 12ஆம் தேதிக்கு இந்த விசாரணையை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…
சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…