தாசில்தாரை தாக்கிய வழக்கில் இன்று மு.க.அழகிரி உட்பட 19 பேர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.
கடந்த 2011 தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை , மேலூரில், ஒரு கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் திமுக நிர்வாகிகள் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அப்போதைய மேலூர் பகுதி தாசில்தாரும், தேர்தல் பொறுப்பாளருமான காளிமுத்து , அதிகாரிகளுடன் அங்கே சென்றார்.
அப்போது மு.க.அழகிரி தரப்பினருக்கும், தாசில்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, அப்போது தாசில்தார் காளிமுத்து , மு.க.அழகிரி தரப்பினர் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உட்பட 19 பெரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார்கள்.