உத்தரப்பிரசேத புழுதிப் புயலுக்கு 17பேர் பலி..!

உத்தரப்பிரசேத மாநிலத்தில் வீசிய புழுதிப் புயலுக்கு 17 பேர் பலியாகினர். வெள்ளிக்கிழமை மாலை கடுமையாக வீசிய புழுதிப் புயலால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டின் கூரைகள் சரிந்ததுடன், ஏராளமான மரங்கள் கட்டடங்கள் மீது சாய்ந்தன.

இவற்றில் சிக்கி மொரதாபாத் (Moradabad) மாவட்டத்தில் மட்டும் 7 பேர் பலியானதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடன்(Badaun), முசாபர் நகர் (Muzaffarnagar), மீரட் (Meerut) மாவட்டங்களில் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. வடமாநிலங்களின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான புழுதிப் புயல் வீசி வருகிறது

Leave a Comment