தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து..!! சென்னையில் போராட்டம் நடத்திய700 பேர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இருந்து கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட வேல்முருகன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், பேரணியில் பங்கேற்ற வேல்முருகன் உள்பட 700 பேர் மீது, 3 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment