எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை.! 2 வாரத்தில் முடித்துக்காட்டிய ஆண்டவர்.! காரணம் அந்த நபர் தான்

கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

படத்தில் வரும் பாடல்கள், சண்டைக்காட்சிகள், தெறிக்கும் வசனம் சூர்யாவின் எண்டரி காட்சி என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து விட்டது. வெளியான நாளிலிருந்து படம் இப்போது வரை  ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

படம் வெளியாகி ஒரு வாரங்கள் கடந்த நிலையிலும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பல திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது.

இந்த நிலையில், விக்ரம் படம் கேரளாவில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம், இந்த படம் கேரளாவில் மட்டும் வெளியான இரண்டே  30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதுவரை வெளியான எந்த தமிழ் திரைப்படமும் கேரளாவில் இத்தனை கோடி வசூல் செய்ததில்லையாம்.

என்னதான் படத்தின் கதை மற்றும் கமல் படமாக இருந்தாலும், கேரளாவில் இவ்வளவு பெரிய ஓப்பனிங் கிடைக்க படத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் பஹத் பாசிலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment