விறுவிறுப்பாக துவங்கிய தமிழ்நாடு காவல்துறை SI எழுத்து தேர்வு.. திரளானோர் பங்கேற்பு.!

தமிழகத்தில் இன்று காவல்துறை உதவி ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு தொடங்கி உள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையத்தால் நடத்தப்படும் இந்த தேர்வின் மூலம் 750 காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

தமிழகத்தில் மொத்தம் 45 தேர்வு மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. இன்று காலை 10 மணிக்கு துவங்கிய இந்த எழுத்து தேர்வு 12.30 மணிக்கு நிறைவடைய உள்ளது.  இதற்காக தேர்வர்கள் 8.30 மணிக்கே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

அதன் பிறகு, நுழைவு சீட்டு சோதனை என கடும் சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இன்று மதியம் 2 மணிக்கு தமிழ் தகுதி தேர்வும் குறிப்பிட்ட தேர்வர்களுக்கு நடைபெற உள்ளது.