எலி விஷம் கலந்த மேகி சாப்பிட்டு பெண் உயிரிழப்பு

எலி விஷம் கலந்த மேகி சாப்பிட்டு மும்பையில் பெண் ஒருவர் மரணம்

ஜூலை 21 அன்று மும்பையில் 27 வயது பெண் ஒருவர் தற்செயலாக எலி விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மும்பை, மல்வானி காவல்துறையின் துணை ஆய்வாளர் மூசா தேவர்ஷி கூறுகையில், அந்த பெண் “டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது, தவறுதலாக எலி விஷம் கலந்த தக்காளியை மேகியில் சேர்த்துக் கொண்டதாக” கூறினார்.

மேகியை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த பெண் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அவரது கணவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

ஒருவாரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.

Leave a Comment