செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? – தனித்தனியே மனு தாக்கல் செய்த திமுக வழக்கறிஞர்கள்!

ஜாமீன் உடனடியாக வழங்க வேண்டும் எனவும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது நிலை இருந்தது.

இதன் காரணமாக செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாததால், மருத்துவமனைக்கே நேரில் சென்ற சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி விசாரணை நடத்தினார். அப்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர் மற்றும் திமுக வழக்கறிஞர்கள் வருகை தந்தனர்.

இந்த சமயத்தில், விசாரணை நடத்திய சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டார். இதனால் தமிழகத்தில் பரபரப்பான சசூழல் நிலவி வருகிறது.  இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி திமுக வழக்கறிஞர்கள் நீதிபதி அலியிடம் மனுதாக்கல் செய்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரிமாண்ட் நிராகரிக்க வேண்டும் எனவும், ஜாமீன் உடனடியாக வழங்க வேண்டும் எனவும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.

செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் கோரியுள்ளனர்.  செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளது. உடனடியாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, இதய அறுவை சிகிச்சை செய்ய வசதியாக ஜாமீன் வழங்க வேண்டும்.

மேலும், ஜாமீன் வழங்கப்படவில்லை என்றால், இதய அறுவை சிகிச்சை செய்ய இயலாது. இதயத்தில் பிரச்சனை உள்ளவரை நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பக்கூடாது எனவும் திமுக வழக்கறிஞர்கள் வாதம் முன்வைத்தனர். இதற்கு பதில் கூறிய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜியின் மனுவை நிராகரித்து காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே, செந்தில் பாலாஜி கைது குறித்து திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?, செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை எப்போது செய்யப்படும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும், ஜாமீன் மனு மீதான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.