வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சரை சந்தித்தோம் – அன்புமணி ராமதாஸ்

எம்.பி.சி பிரிவில் உள்ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி. 

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு:

dmkpmk

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி  ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். முதல்வரை சந்திந்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதலமைச்சரை சந்தித்து பேசினோம். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது.

சாதிவாரி கணக்கெடுப்பு:

pmk18

தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கியுள்ள தலித், வன்னியர் சமுதாய மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும். எங்களின் கொள்கை 100% வேலைவாய்ப்பில் எந்த சமுதாயத்தினர் எவ்வளவு இருக்கிறார்களோ அவ்வளவு விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடத்த வேண்டும், பீஹாரில் நடத்துகிறார்கள். சமூகநீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

போதை பொருட்கள் தடுக்க வலியுறுத்தல்:

மேலும், சாதி வாரியான கணக்கெடுப்பு என்பது நீண்ட கால செயல்பாடு, இருந்தாலும் இந்த 2 மாதத்திற்குள்ளாக நீதிமன்றம் தெரிவித்த தரவுகளை சேகரித்து மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசை வலியுறுத்தி உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

drugs18

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தடுக்க சிறப்பு கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம் என்றும் நீர் மேலாண்மை பிரச்சினைகள் குறித்தும் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Comment