தோல்விக்கு காரணம் இதுதான்: விராட் கோலி புலம்பல்

  • ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் பார்த்திவ் படேல் அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து எளிதான இலக்குடன் களமிறங்கிய துவக்க வீரர் ஜோஸ் பட்லர் அற்புதமாக ஆடினார் அவர் 43 பந்துகளில் 59 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 31 பந்துகளில் 38 ரன்கள் எடுக்க 19.5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி இலக்கை எட்டியது.

இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பேசியதாவது…

மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் ஓரளவிற்கு கொண்டு சென்று சேர்த்தனர். பந்தில் ஈரம் நிறைந்துவிட்டது. இரண்டாவது ஆட்டத்தில் சரியாக பந்து வீச முடியவில்லை. நாங்கள் நிறைய தப்புகலை செய்தோம். சில கேட்சுகளை விட்டோம். மேலும், 20 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம் இதுவே தோல்விக்கு காரணம் என்று பேசினார் விராட் கோலி.

Leave a Comment