2 லட்சத்தை அசால்ட்டாக தொலைத்த தயாரிப்பாளர்! விஜயகாந்த் செய்த செயல்? ப்பா என்ன மனுஷன்யா!

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் செய்த உதவிகள் எல்லாம் காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். அவர் செய்த பல உதவிகளை பற்றிய தகவல்கள் வெளியே தெரிந்தாலும் கூட அவர் செய்த சில உதவிகளை பற்றிய தகவல் வெளியே தெரியாமல் இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில், தயாரிப்பாளர் ஒருவர் விஜயகாந்த் கொடுத்த பணத்தில் 2 லட்சத்தை தொலைத்த போது அவர் செய்த வியப்பான செயல் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

விஜயகாந்துடன் ஆரம்ப காலத்தில் இருந்த பயணத்திவர் தயாரிப்பாளர் சுப்பையா. சுப்பையா விஜயகாந்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். விஜயகாந்த் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை சொல்லும் அளவிற்கு அவர் மிகவும் நெருக்கமானவராம். ஒரு முறை காந்தி பிறந்த மண் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுக்கொண்டு இருந்ததாம்.

அந்த சமயம் இப்ராஹிம் ராவுத்தர்  சுப்பையாவை அழைத்து 15 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்து படப்பிடிப்புக்கு கொண்டு செல்ல கூறினாராம். தமிழகத்தில் ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு அடுத்த நாள் அங்கு சென்று கொடுப்போம் என்று சுப்பையா ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தாராம். தங்கி இருந்த சமயத்தில் வெளியே செல்லும்போது ஹோட்டலின் நிர்வாகத்திடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றார்களாம்.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

அந்த சமயம் ரூமை சுத்தம் செய்ய வந்தவர் ரூமுக்குள் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தில் 2 லட்சம் பணத்தை திருடிவிட்டார்களாம். இது முதலில் சுப்பையாகவுக்கு தெரியவில்லையாம். அடுத்த நாள் ஊட்டியில் படப்பிடிப்புக்கு சென்று அங்கு போய் கணக்கு பார்த்தபோது தான் பணம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. பணம் எப்படி குறைந்திருக்கும்? யார் எடுத்திருப்பா? என சுப்பையா தலையில் கையை வைத்து கொண்டு யோசித்து கொண்டிருந்தாராம்.

அங்கு வந்த விஜயகாந்த் என்ன யோசித்து கொண்டு இருக்கிறாய்? என்று கேட்டாராம். அதற்கு சுப்பையா 2 லட்சம் பணம் தொலைந்துவிட்டது என்று கூறினாராம். பிறகு எதுவுமே சொல்லாமல் விடுயா என்பது போல கூறிவிட்டு இப்ராஹிம் ரௌதர்க்கு கால் செய்து இப்படி பணத்தை அவன் தொலைத்துவிட்டான். நான் அவனை பயங்கரமாக திட்டிவிட்டேன். நீ எதுவும் அவனை திட்டாதே என்று கூறினாராம்.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

ஆனால், பணத்தை தொலைத்ததற்கு விஜயகாந்த் சுப்பையாவை திட்டவே இல்லயாம். இப்ராஹிம் ராவுத்தர் அவரை திட்டிவிட கூடாது என்ற காரணத்தால் அவரிடம் அப்படி சொன்னாராம். இந்த தகவலை சுப்பையாவே பேட்டியில் தெரிவித்துள்ளார். ” அவருடைய இடத்தில் வேறு யாரும் இருந்தால் பணத்தை எடுத்து வைத்துவிட்டு செல் என்று கூறியிருப்பார்கள். அந்த சமயம் எனக்கு சம்பளமே 40,000 தான் அவர் அதில் கூட பணத்தை கொடு என்று கூறவில்லை தொலைந்த பணம் பற்றி அதன்பிறகு பேசவே இல்லை” எனவும் சுப்பையா தெரிவித்துள்ளார்.

Leave a Comment