பங்குனி உத்திரம்: கோயில் கோயிலாக சென்ற விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி.!

இன்று பங்குனி உத்திரம் தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை நயன்தாராவும் அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் கும்பகோணத்தில் உள்ள அவர்களுடைய குலதெய்வகோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தனர்.

Nayanthara
Nayanthara [Image Source : Twitter]

குலதெய்வ கோவிலுக்கு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபங்குனி உத்திரம் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் புகைப்படங்களும், குலதெய்வ கோவிலில் சுவாமி தரிசனம் செய்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து தற்பொழுது, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதி வழிபட்டுள்ளனர்.

பின்னர், அங்கிருந்து மக்கள் அவர்களிடம் செல்பீ எடுத்துக்கொண்டனர், இன்று பங்குனி உத்திரம் என்பதாலோ என்று தெரியவில்லை தொடர்ந்து இன்று முழுக்க கோவிலுக்கு சென்றுள்ளது போல் தெரிகிறது. ஏற்கனவே, இவர்கள் இருவரும் அடிக்கடி கோவிலுக்கு செல்வதை வழக்கமாகத்தான் வைத்திருக்கிறார்கள்.

Trichy Airport NAYANWIKI
Trichy Airport NAYANWIKI [Image Source : Twitter]

Leave a Comment