கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிப்பு

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் அவகாசமும் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு.

தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் B.V.Sc., & AH, B.Tech., படிப்புகளில் சேர கடந்த 12-ம் தேதி முதல் இதுவரை 14,000 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது விண்ணப்பிக்கும் அவகாசமும் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப் படிப்புகளில் சுமார் மொத்தம் 580 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கான விண்ணப்பப்பதிவு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக வருகிற 26-ந் தேதி மாலை 5 மணி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நீட்டிப்பு செய்யபட்டுள்ளது.

Leave a Comment