வேங்கைவயல் விவகாரம்.! 2 பேர் குரல் பரிசோதனைக்கு ஆஜர்! 30 நாள் அவகாசம் கேட்டு சிபிசிஐடி மனு!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் காவலர் உட்பட 2 பேரிடம் குரல் பரிசோதனை.

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சென்னையில் குரல் மாதிரி பரிசோதனைக்காக இருவர் ஆஜராகியுள்ளனர். வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சென்னையில் குரல் மாதிரி பரிசோதனனைக்காக இருவர் ஆஜராகியுள்ளனர். அதன்படி, ஆயுதப்படை காவலர் முரளிராஜா உட்பட இருவரிடம் மயிலாப்பூரில் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்படவுள்ளது. வேங்கைவயலை சேர்ந்த முரளிராஜா, கண்ணதாசன் ஆகியோர் குரல் மாதிரி பரிசோதனைக்காக ஆஜராகியுள்ளனர்.

சம்பவம் நடந்தபோது முரளிராஜா, கண்ணதாசன் ஆகியோர் வாட்ஸ் ஆப்பில் குரல்பதிவு மூலம் உரையாடியதால் சந்தேகம் எழுந்தது. குரல் பதிவின் உண்மை தன்மை குறித்து உறுதி செய்ய இருவரிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும், வேங்கைவயல் வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை பதிவு செய்ய அவகாசம் கேட்டு சிபிசிஐடி மனுதாக்கல் செய்துள்ளது. சாட்சியங்களிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் 30 நாள் அவகாசம் கேட்டுள்ளது சிபிசிஐடி.

Leave a Comment