சென்னையில் ஆமைகள் காப்பகம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

சென்னையில் ஆமைகள் காப்பகம் மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் முதன் முறையாக 6.30 கோடி ருபாய் மதிப்பில், சென்னையில் ஆமைகள் காப்பகம் மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஆமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதன் மூலம் நடவடிக்கை  எடுக்கப்படுகிறது. மேலும், ஆலிவ் ரிட்லி, கிரீன், லெதர்பேக், ஹாவ்க்ஸ்பில், லோகர்ஹெட் உள்ளிட்ட கடல் ஆமை இனங்களை பெருக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.

Leave a Comment