கொடைக்கானல் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..! வனத்துறை உத்தரவு..!

கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோடைகாலம் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் அனைவரும் விடுமுறையை கழிப்பதற்காக கொடைக்கானல் போன்ற சுற்றுலா இடங்களுக்கு செல்வார்கள். அந்த வகையில், கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் செல்வார்கள். தற்பொழுது, கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், பேரிஜம் ஏரியில் உள்ள வனப்பகுதியில் யானைகள் தங்களது குட்டிகளுடன் முகாமிட்டு இருப்பதால், யானைகள் அப்பகுதியை விட்டு வெளியேறியவுடன் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதுவரை பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் யாரும் செல்லக்கூடாது என வனத்துறையினர் தடை விடுத்துள்ளனர்.

Leave a Comment