தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள்….! மக்களே பார்க்க மறக்காதீங்க…!

தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள்.

ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும். இந்த நாள் நிழலில்லா நாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மதிய நேரத்தில் நமது நிழலை பார்க்க முடியாத அளவுக்கு, நிழல் நமது காலின் அடியில் விழும். இந்த நாளானது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழும்.

அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் இந்த நாள் வந்தது. இரண்டாம் முறையாக, ஆகஸ்ட் மாதம் ஆன இன்று மதியம் இதனை காண முடியும். ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய இடங்களில் இந்த நாளை காண முடியும். மேலும் சென்னையிலுள்ள கோட்டூர்புரத்தில் பிர்லா கோளரங்கத்தில் இந்த நாள் குறித்து விளக்கம் அளிக்கவும் காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.