தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்.
தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனீ, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கண்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.