தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தினை இயக்க விஜய்யின் மகனான சஞ்சய் திட்டமிட்டு வருவதாக திவ்யா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார் .இதனை தொடர்ந்து அவரது 66-வது படத்தினை இயக்குவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.அதற்காக பல இயக்குனர்கள் போட்டியிட்டும் வருகின்றனர்.அந்த வரிசையில் விஜய்யின் மகனான சஞ்சய்யும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம் சஞ்சய் தனது அப்பாவை வைத்து படத்தினை இயக்க ஆசைப்படுவதாகவும் ,அதற்கு விஜய் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்து .தற்போது அதனை விஜய்யின் மகளான திவ்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் .அதில் தனது சகோதரர் அப்பாவை வைத்து ஒரு படத்தினை இயக்க திட்டமிட்டு வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார் . இதிலிருந்து தளபதியின் அடுத்த படத்தினை சஞ்சய் இயக்கி சினிமாவில் என்டரி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை முடித்துள்ள சஞ்சய் ஏற்கனவே குறும்படம் ஒன்றை இயக்கியதும் ,அது வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…