தலைமறைவான கைதிகள்.? தமிழக உள்துறை செயலாளருக்கு சம்மன்.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

ஜாமீனில் வெளியான கைதிகளில் தலைமறைவான கைதிகள் குறித்த விசாரணையில் தமிழக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஹரியானா மாநிலத்தில் ஜாமீனில் வெளிவந்த கைதி தலைமறைவான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு படி,  ஒவ்வொரு மாநிலத்திலும் ஜாமீனில், பரோலில் வெளியான கைதிகளில் தலைமறைவான கைதிகள் தொடர்பான விவரங்களை மத்திய அரசிடம் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த விவரங்களை வைத்து மத்திய அரசு ஒரு குழு அமைத்து அவர்களை தேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற உத்தரவுபடி பல மாநிலங்கள் தகவல் அளித்தது எனவும், இந்த மத்திய பிரதேசம் மற்றும் தமிழகம் சில மாநிலங்கள் தகவல்கள் அளிக்கவில்லை எனவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.

இதனால், உச்சநீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக அடுத்த விசரணையின் போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணிந்திர ரெட்டி நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

Leave a Comment