பாலியல் குற்றச்சாட்டு: பிரிஜ் பூஷனுக்கு எதிரான வீராங்கனைகளின் மனு…முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்.!

மல்யுத்த சம்மேள தலைவர் பிரிஜ்பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வீராங்கனைகள் வழக்கு முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளை செய்வதாக பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, புகார் அளித்த நிலையிலும் FIR பதிவு செய்யாமல் இருப்பதாக கூறப்பட்டது. இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூறி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மல்யுத்த சங்கத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது மனு வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக, எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறிய டெல்லி காவல்துறை மற்றும் 3 மாதங்கள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடந்தப்படும் என்று போலீசார் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு இன்று இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.