விவசாயிகளுக்கு நிவாரண நிதி ஆணை வழங்குகிறார் முதலமைச்சர்!

விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை இன்று வழங்குகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.  சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில், விவசாயிகளுக்கு நிவாரண நிதி ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

இதுபோன்று, கேலோ இந்தியா, தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும் இன்று நிதி வழங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், அறநிலையத்துறை சார்பில் தங்க முதலீடு பத்திரத்தினை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவரிடம் முதலமைச்சர்  முக ஸ்டாலின் வழங்குகிறது.