அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மார்ச் 5-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழு கொடுக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் அப்டேட் கேட்டு வருகிறார்கள். வலிமை அப்டேட் வரவில்லை என்றாலும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் வலிமை படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் புது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.ஆம்,கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளது. தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பில்லா படத்தினை வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் தல அஜித்தினை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் காண்பது ரசிகர்களைடைய பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…