அமெரிக்காவில் பயங்கரம்! 3 கறுப்பினத்தவர்கள் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள டாலர் ஜெனரல் ஸ்டோரில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். புளோரிடாவின் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். வழக்கம் போல அனைவரும் அந்த பகுதியில் தங்களுடைய வேலைகளை செய்துகொண்டிருந்த நிலையில், திடீரென அந்த பகுதியில் நுழைந்த வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்தார்.

பிறகு திடீரென அவர் தனது கைகளில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கறுப்பினத்தவர்களை சுட தொடங்கினார். துப்பாக்கி சத்தம் கேட்டதை தொடர்ந்து கடையில் இருந்த மற்றவர்களும் பதட்டத்தில் கூச்சலிட்டனர். இந்த மோசமான துப்பாக்கிசூட்டில் தாக்குதலில்  3 கறுப்பினத்தவர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்ய முயன்றார்கள். இதனை கவனித்த வெள்ளை இனத்தவர் தனது துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

பின் காவல்துறையினர் அவருடைய துப்பாக்கியை பறிமுதல் செய்து பார்த்ததில் அதில் எழுதப்பட்டிருந்த இனவெறி வசனங்களை வைத்து இது இனவெறி காரணமாக நடந்த தாக்குதல் என கண்டுபிடித்தனர். அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.