தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்குகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் முறையாக தடுக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்.

இந்தியாவிலேயே  அனைவரும் விரும்பி வாழக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்விக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதிலளித்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் கூறுகையில், சாதி கலவரங்கள், மத கலவரங்கள் போன்ற வழக்கமான சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் இல்லாமல் முறையாக தடுக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றபோது உரிய பாதுக்காப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என தெரிவித்தார். இதனிடையே, அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் காரசாரமான வாதம் நடைபெற்றது. அதிமுக அலுவலகத்தில் நடந்த பிரச்னை உட்கட்சி விவகாரம் , வெளியே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பாதுகாப்பு கொடுத்தோம், உள்ளே நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல என முதல்வர் தெரிவித்திருந்தார்.

Leave a Comment