சூர்யகுமார் யாதவ் இந்த இடத்திற்கு தான் சரிப்பட்டு வருவார்! கவுதம் கம்பீர் கருத்து!

டி20 போட்டிகள் என்றால் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு அருமையாக விளையாட கூடிய இந்தியாவின் நம்பர் 1 பேட்ஸ்மேன். இதுவரை 53 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 1841 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஒரு நாள் போட்டிகள் குறித்து அவருடைய பார்மை பார்த்தால் சற்று கவலை கிடமாக தான் இருக்கிறது.

எனவே, சூர்யகுமார் யாதவ் ஒரு நாள் போட்டியில் அவருடைய பேட்டிங் பற்றி பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். இத்தகைய சூழலில் உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் சூர்யகுமார் யாதவ் பெயர் இடம்பெற்றுள்ளது . இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் உலகக்கோப்பை போட்டியில் விளையாடினாள் இந்த இடத்தில் இறங்கி விளையாடினாள் தான் சரியாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ” உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு முன்பு உங்களிடம் நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் பக்காவான வீரர்களை மாற்றவே அல்லது தேர்வு செய்யாமல் பெஞ்சில் வைத்திருக்கவோ வேண்டாம். நான் அதை பற்றி எதுவும் சொல்ல வரவில்லை ஆனால். உலகக்கோப்பை அணியில் சூர்யகுமார் யாதவ் விளையாடினாள் அவரை நம்பர் 6-7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

நம்பர் 5 இல் யார் பேட் செய்வார் என்பது பெரிய கேள்வியாக இருக்கலாம். அதற்கும் என்னிடம் ஒரு பதில் இருக்கிறது. ஜடேஜா நம்பர் 5, ஹர்திக் 6 மற்றும் சூர்யகுமாரை பேட் செய்யலாம். சூர்யகுமார் யாதவ் கடைசியாக 15-20 ஆகிய ஓவர்களில் களமிறங்கினாள் அவர் அருமையாக விளையாடுவார். அதற்கு உதாரணம் அவர் டி20 போட்டிகளில் விளையாடியது. அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விரைவாக இறங்கி விளையாடுவதால் தான் சரியாக விளையாட முடியவில்லை.

எனவே, அவரை நம்பர் 6-7 ஆகிய இடங்களில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கினால் கண்டிப்பாக அவரும் நன்றாக விளையாடுவார். சூர்யகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் 7-வது இடத்திலும் இருக்க வேண்டுமா அல்லது மற்ற இடங்களில் இறங்கவேண்டுமா என்பதை தேர்வு குழுவும் கேப்டனும் தான் முடிவெடுப்பார்கள். என்னை பொறுத்தவரை  சூர்யகுமார் யாதவ் இந்த 6-7 ஆகிய இடத்திற்கு தான் சரிப்பட்டு வருவார் எனவும் ” கவுதம் கம்பீர்  கூறியுள்ளார்.