ஈரோட்டுக்கு பறந்தது தேர்தல் பணிக்காக சிறப்பு படை!

தேர்தல் பணிக்காக அண்டை மாவட்டங்களில் இருந்து 5,000 பேர் வரவழைக்கப்படுவர் என காவல்துறை தகவல்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்காக சிறப்பு படை போலீஸ் ஈரோடு சென்றுள்ளது. முதற்கட்டமாக 200 பேர் ஈரோடு சென்றுள்ள நிலையில், மேலும் 5,000 பேர் தேர்தல் பணிக்காக செல்ல உள்ளனர். தேர்தலின்போது, தேவைக்கேற்ப அண்டை மாவட்டங்களில் இருந்து 5,000 பேர் வரவழைக்கப்படுவர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன தணிக்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறை கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பணிக்கான சிறப்பு படை அங்கு விரைந்துள்ளது.

Leave a Comment