கிரிக்கெட்

அட்டகாசமான பந்து வீச்சில் திரில்லாக இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா ..!

டி20I சூப்பர் 8:  நடந்து கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றின் போட்டியும், இத்தொடரின் 45-வது போட்டியுமான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி அதிரடியுடன் ஆரம்பித்தாலும் மிடில் ஓவர்களில் சற்று விக்கெட்டுகளை இழந்து நிதானமாகவே விளையாடினர்.

இதனால், 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் டி காக் 38 பந்துக்கு 65 ரன்கள் எடுத்தார். அவருக்கு பின் டேவிட் மில்லர் 28 பந்துக்கு 43 ரன்கள் விளாசி இருந்தார்.

அதனை தொடர்ந்து 164 என்ற இலக்கை எடுக்க இங்கிலாந்து அணி களமிறங்கியது. நன்றாக பேட்டிங்கை தொடங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை எடுக்க தடுமாறியது.

அதன்பின் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஹாரி புரூக் இருவரும் அற்புதமான ஒரு கூட்டணியை அமைத்து சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தனர். இறுதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி அங்கும், இங்கும் மாறி மாறி சென்றது.

அதிரடியாக விளையாடி கொண்டிருந்த லிவிங்ஸ்டோன் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க போட்டி மேலும் விறுவிறுப்பாக சென்றது. கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க வேண்டி இருந்த நிலையில் முதல் பந்திலேயே சிறப்பாக அரை சதம் அடித்து ஆடிக்கொண்டிருந்த ஹாரி புரூக் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து களத்தில் இருந்த சாம் கர்ரன், நோர்கியாவின் பந்தை அடிக்க முடியாமல் கோட்டை விட்டார். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியின் கடைசி ஓவரை சிறப்பாக வீசி நோர்கியா தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார்.

இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று சூப்பர் 8 சுற்றின் இரண்டவது வெற்றியையும் பெற்று அரை இறுதி சுற்றுக்கு ஒரு காலை எடுத்து வைத்துள்ளனர்.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

4 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

6 hours ago