கோவை ஆட்சியரிடம் கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்த சமூக ஆர்வலர்..!

சமூக ஆர்வலர் பெரியார் மணி, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியார் மணி. சமூக ஆர்வலரான இவர் வித்தியாசமான வேடம் அணிந்து வந்து பல முறை கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த  வகையில்,இன்று, கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் கர்ப்பிணி வேடம் அணிந்து வந்து மனு அளித்துள்ளார்.

ஆட்சியரிடம் அவர் அளித்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகம் முழுவதும் ஏழை கர்ப்பிணிப் பெண்களுக்கு முத்துலட்சுமி ரெடி அம்மையார் மகப்பேறு நிதியுதவித் திட்டம் பல மாதங்களாக வழங்காமல் நிலுவையில் உள்ளதாகவும், ஏழைப்பெண்களின் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றன எனவே இந்தத் திட்டம் சரியாக பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.