அதிர்ச்சி.. கொரோனாவால் ஒரே நாளில் 67 பேர் பலி… 21,411பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 21,566ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 21,411 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,50,100 ஆக அதிகரித்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 5,25,997 பேர் ஆக உள்ளது.
  • அதைப்போல,கடந்த ஒரே நாளில் 20726 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை  4,31,92,379 ஆக பதிவாகியுள்ளது.
  • நாடு முழுவதும் இதுவரை 2,01,68,14,771 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 34,93,209 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Leave a Comment