செந்தில் பாலாஜியிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்ததா என ஆணையம் விசாரணை.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்ததா? என்பது குறித்து ஆணைய உறுப்பினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அமலாக்கத்துறை அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.