சாத்தான்குளம் விவகாரம் – விசாரணை நிலை அறிக்கை தர உத்தரவு!

3 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என காவலர் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நிலையில் பலமுறை ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என ஸ்ரீதர் கூறியுள்ளார். எனவே 3 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என காவலர் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது சாத்தான்குளம் கொலை வழக்கில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment