சென்னையில் மழை, வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவு பெற்ற நிலையில், சென்னை நகரில் இன்று பல்வேறு இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது,.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏதும் இல்லை என்றாலும், காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு மேல், ஆவடி, அம்பத்தூர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், அண்ணாநகர், மயிலாப்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழைகொட்டித்தீர்த்தது.
இதனால், பள்ளி முடித்து வீடு திரும்பும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். ஏற்கனவே, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஜனவரி 4 மற்றும் நாளை ஜனவரி 5) ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!
அதன்படி, தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும், வரும் ஜனவரி 6-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…