கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தையும், புதிய உலர் கப்பல் துறையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார் அதற்காக நேற்று இரவு கேரளா வந்தடைந்தார்.
பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு.! உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரணை.?
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, கேரள முதலமைச்சர் விமான நிலையத்திற்கு சென்று அரசு மரியாதையுடன் அவரை வரவேற்றார். பின்பு திறந்தவெளி வாகனத்தில் பயணித்த பிரதமர் மோடிக்கு வழிநெடுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதன் பிறகு, இன்று காலை குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, குருவாயூரப்பனை தரிசித்தார். குருவாயூர் கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் வந்த சமயம் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிற்கு தனது ஆசிகளையும் வழங்கினார்.
ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, தற்போது 11 நாள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, பல்வேறு கோவிலுக்கு சென்று வருகிறார். குருவாயூரப்பன் கோவில் தரிசனத்தை தொடர்ந்து, வரும் ஜனவரி 19ஆம் தேதி கேலோ விளையாட்டு போட்டிகளை துவங்கி வைக்க திருச்சி வரும் பிரதமர் மோடி, அங்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல உள்ளார். அதற்கு பிறகு ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…
சென்னை : மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…